Total Pageviews

Sunday, December 26, 2010

சிகரட் ஒரு வித்தியாசமான பார்வை


submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/blog-post.html"

Monday, December 20, 2010

Touching Scene Ever (Indian Film) with tamil subtitles

.(Any Languagers are can understand)(English, Arabic, telugu, sinhala, any language)
u eyes will cry without ur permission after watch this scene
உங்களை அறியாமலேயே நீங்கள் அழுதுவிடுவீர்கள்
Amazing Scene

Heart Touching Scene From Indian Film (Swedish)
மனதை நெகிழ வைக்கும் அற்புதமான ஒரு வீடியோ காட்சி
உங்கள் குழந்தைகளுக்கும் காட்டுங்கள்.....
இது குழந்ததைகளை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது.
அற்புதமான காட்சி அமைப்பு..... Sharukh khan starring..... scene from amazing film swedish
Apple iBook G3 500Mhz 128MB 10Gb CDROM 12.1'' OS X OFFICE 2004 Plus Upgraded Models Available


Apple iBook G3 500Mhz 128MB 10Gb CDROM 12.1'' OS X OFFICE 2004 Plus Upgraded Models Available  submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/touching-scene-ever-indian-film-with.html"

சின்ன குத்பா.... Small Kuthba (Small Advice)


சின்னதொரு குத்பா?.......
நம்மில் சிலருக்கு வெள்ளிக் கிழமையென்றாலே ஒரு வகையான தூக்கம் தான் காரணம் என்ன? submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/small-kuthba-small-advice.html"

Tuesday, December 14, 2010

சிந்திக்க தான் குர்ஆன்......

நீங்களும் ஒரு நாள் இப்படி மாட்டிக் கொண்டு தவிக்க நேரிடலாம்.....
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%86%E0%AE%A9.html"

Tuesday, December 7, 2010

பாருக்குள்ளே ஒரு நாடு (Nice poem from Kaviko) Amazing

அவர்களைச் சிறையில்
சந்தித்தேன்....

 

“என்ன குற்றம் செய்தீர்கள்”
என்று கேட்டேன்.

ஒவ்வொருவராகச்
சொன்னார்கள்..



எங்கள் வீட்டில்
திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வருமானத்தைக்
கேட்டார்கள்”
‘நான் வேலையில்லாப்
பட்டாதாரி’ என்றேன்
வருமானத்தை மறைத்தாக வழக்குப்
போட்டு விட்டார்கள்.

“நான் கரி மூட்டை
தூக்கும் கூலி”
கூலியாக கிடைத்த
ரூபாய் நோட்டில்
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது.
கறுப்பு பணம்
வைத்திருந்ததாகக்
கைது செய்து விட்டார்கள்.

“என் வயலுக்கு வரப்பு
எடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று
பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”



“அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன்.
அரசுப் பணியாளரை
அவருடைய கடமையைச்
செய்ய விடாமல்
தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.”

“அலிபாபாவும் நாற்பது
திருடர்களும்” படச்
சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன்.
சட்டமன்ற
உறுப்பினர்களை
அவதூறு செய்ததாக
அழைத்துக் கொண்டு
வந்து விட்டார்கள்”

“வறுமைக் கோட்டை
அழிப்போம்” என்று பேசினேன்.
அரசாங்க சொத்தை
அழிக்கத் தூண்டியதாக
அடைத்துப்
போட்டுவிட்டார்கள்”

“ஊழல் பேர்வழிகளை
நாடு கடத்த வேண்டும்”
என்று எழுதினேன்,
“கடத்தல்காரன்” என்று
கைது செய்து விட்டார்கள்.

“நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன்.
நாட்டின்
ஸ்திரத் தன்மையைக்
குலைத்ததாகக் கொண்டு
வந்து விட்டார்கள்”


“சுதந்திர தின விழாவில்
‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள்.
நான் பசியால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.
எழுந்து நிற்க முடியவில்லை.
தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சிறையில்
அடைத்து விட்டார்கள்”

“அக்கிரமத்தை எதிர்த்து
ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன்”
என்று யாரோ
கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்
என்பெயர் கண்ணன்.
“பயங்கரவாதி” என்று
என்னைப் பிடித்துக் கொண்டு
வந்து விட்டார்கள்.

நான் வெளியே வந்தேன்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை
எதுவும் இல்லாமல் நாடு
அமைதியாக இருந்தது

submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/nice-poem-from-kaviko-amazing.html"

Friday, December 3, 2010

இஸ்லாமிய இசை புரட்சி நாயகன் (Maher Zain)

இளசுகளின் இதயத்துடிப்பு

சினிமா பாடல் கேட்க வேண்டாம் அது ஹராம் அது சீரழிவை கொண்டு வருகிறது என்றெல்லாம் நாம் நிரைய பயான் கேட்டிருக்கிறோம். அடுத்தவர்களுக்கு பயான்பன்னியுமிருக்கிறோம். உண்மையில் நாம் பயான் செய்வதுடன் மட்டும் எங்களை நிறுத்திக் கொண்டுவிட்டோம். அந்த சினிமாப் பாடல்களுக்கு பகரமாக இஸ்லாமிய படைப்புக்களை உருவாக்குவதில் எந்த முயற்சியும் யாரும் எடுத்தாக தெரியவில்லை.

 அப்படியான சூழ்நிலையில் எங்களுக்கு சினிமா பாடல்களுக்கு பகரமாக அல்ல அதைவிட சிறந்த படைப்புக்களை தந்து கொண்டிருக்கிறார் இந்த படைப்பாளன். இவரின் பாடல்களை நீங்கள் உங்கள் வீடுகளில் ஒலிக்கவிடுங்கள். நிச்சயம் உங்கள் பிள்ளைகள் சினிமாப் பாடல்களை பாடமாட்டார்கள் அந்த தூஷனப்பாடல்களை பாடமாட்டார்கள். இவரின் இந்த இஸ்லாமிய பாடல்களையே பாடுவார்கள். ஏனெனில் இந்தப் பாடல்கள் ஆங்கிலத்தில் அமைந்தாலும் இதில் வரும் அல்லாஹ் ஸூப்ஹானல்லாஹ் இன்ஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் பாரகல்லாஹ் ரஸூலின் மீது ஸலாவத்து சொல்லல் போன்றவை மிகவும் அடிக்கடி உச்சரிக்க முடியுமான சிறுவர்களையும் கவரக்கூடிய மெட்டில் அமைத்துள்ளார். மற்றும் இவரின் பாடல்கள் சோர்ந்து போயிருக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தில் நம்பிக்கையையும் ஈமானையும் அதிகரிப்பதாகவே உள்ளது. சோர்ந்து போன உள்ளங்களுக்கு புத்துயிரழிக்கும் ஒரு பாடலாகவே கீழே உள்ள இன்ஷா அல்லாஹ் பாடல் மிகவும் உணர்வுபூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பாடலி;ன் தமிழ் மொழிபெயர்ப்யையும் நீங்கள் பாடலுடனேயே சேர்த்து பார்க்கலாம்.இது மிகவும அற்புதமான பாடல் கட்டாயம் ஒவ்வொரு முஸ்லிமும் பார்க்க வேண்டிய பாடல்....


1. நம்பிக்கையீனங்களையும் தோல்விகளையும் விரக்தியையும் கேட்கும் நாங்கள் பாவங்களில் மூழ்கி அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துள்ள நாங்கள் இந்த பாடல்களை கேட்பதின் மூலம் புது நம்பிக்கையை பெறலாம் புது புத்துயுரை பெறலாம்.... அல்லாஹ் மீதான நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். கோஞ்சம் கேட்டுபாருங்க நான் சொல்வது உண்மையா என்று....






2. எங்கள் உயிரிலும் மேலான நபியவர்களின் சில வாழக்கை சம்பவங்களை ஞாபமூட்டுகிறது இந்து அழகிய இனிமையான பாடல்......
அந்த இருள் சூழ்ந்த ஜாஹிலிய்யத்துக்கு ஒளியூட்டிவர் எங்கள் நபி... அது போல் இன்றைய ஜாஹிலிய்யத்துக்கு ஒளியூட்டக் கூடியதும் நம் நபியின் அழகிய பண்புகளும் வழிகாட்டால்களும் தான் அழகிய பாடல் கட்டாயம் பார்த்து ரசியுங்கள்.




3. பலஸ்தீன் விடுதலை சம்பந்தமாக பல பாடல்களை பார்த்திருப்பீhகள். ஆனால் இந்த பாடல் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. ஒரு கார்டுனை போல் சிறுவர் பெரியவர்கள் எல்லோரையும் கவருவது போல் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களின் வரிகள் பலஸ்தீன் விடுதலையடைந்துவிடும் என்று உறுதியாக சொல்வதுடன் அதை எங்கள் மனதில் உறுதியாக பதியவும் வைக்கிறது. பலஸ்டைன் வில் பீ ப்ரீ...........
PALASTINE WILL BE FREE




பார்த்தீர்களா எவ்வளவு அருமையான பாடல்கள் இதை கேட்பவர்கள் இதை தான் முனுமுனுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமி;ல்லை.
இந்த அருமையான படைப்புக்களுக்கு சொந்தகாரர் யார் என்று பார்த்தேயோமானால் அவர் பெயர் தான் மாஹிர் ஸெய்ன் இஸ்லாமிய இசை உலகின் முடிசூடா மன்னன். இசையால் கவரடப்படாதவர் யாருமில்லையென்றே சொல்லாம் அந்த வகையில் இசையால் கவரப்பட்ட மாஹிர் ஸெய்ன் தனது




10ஆவது வயதிலேயே இசைக் கருவியை கையிலெடுக்கிறார். அன்று தொடக்கம் மாஹிரின் வாழ்வில் இசை ஒன்றரக் கலந்தது என்று தான் கூறலாம். அவருக்கு இசையென்றால் அவ்வளவு ஆர்வம்.
மாஹிர் ஸெய்ன் 8 வயதாக இருக்கும் போதே அவரது குடும்பம் ஸ்வீடனை நோக்கி புலம்பெயர்கின்றனர். தனது கல்வி நடவடிக்கைகளை அங்கேயே தொடர்ந்து பின் பல்கலைக்கழகத்தில் Aeronautical Engineering (விமானம் சம்பந்தமான) படிப்பை முடிக்கிறார். அவரது வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டு போனாலும் சிறுவயதிலிருந்தே அவர் இசை மேல் வைத்த  ஆர்வம் அவரிடமிருந்து குறையவேயில்லை.
மாஹிர் எத்தனையோ இரவுபகல்களை பாடல் தொகுப்பதிலும் இசையமைப்பதிலும் நண்பர்களுடன் பாடசாலையில் கழித்திருக்கிறார்.
இசையமைப்பாளராக மாஹிர் ஸெய்ன் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது Red One என்ற பிரபலமான இசை கலைஞருக்கு அறிமுகமாகிறார். Red One சுவீடனில் புகழ் பெற்ற ஒரு இசையமைப்பாளர். அவருடன் சிறிது காலம் பணியாற்றிய மாஹிர் நிவ்யோக் பயணமாகிறார். அங்கு NY என்ற நிறுவனத்துடன் சிறிது காலம் பணிபுரிகிறார். இக்காலப்பிரிவுகளில் மிகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் பாடகர்களுடன் இணைந்து பணி புரியும். வாய்ப்பு இவருக்கு கிட்டியது.
அவரது முதல் அல்பம்Thank you allah” என்ற புகழ்பெற்ற இசை அல்பம் வெளியிடப்படுகிறது. இந்த அல்பம் மாஹிரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இவரின் இந்த அல்பம் 'அமேசன்'“Amazon” ' உலக இசைவரியில் முதலாமிடத்தையும் R & B Chart இல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துக் கொண்டது.

ஜனவரி 2010 இல் எகப்தில் மிகப் பெரும் வானொலி நிறுவனமான Nujoom Fm ஏற்பாடு செய்த இசைப் போட்டியில் 2009 க்கான சிறந்த பாடலாக இவரின் 'யா நபி ஸலாம் அலைக்க' என்ற பாடல் தெரிவாகியது. இப்போட்டியில் இஸ்லாமிய உலகின் முடி சூட மன்னர்களான மொஹமட் முனீர் ஸமீ யூஸூப் (Sami Yusuf) போன்றோரும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் இப்பொழுது இவரின் இசை போராட்டத்தை பல நாடுகளில் நடத்தி வருகிறார். Algeria, Australia, Belgium, Canada, Egypt, England, France, Holland, Sweden, USA,போன்ற நாடுகளில் நடத்தி வருகிறார்.

இவர் எதிர்காலத்தில் இஸ்லாமிய இசைத் துறையில் பெரிய புரட்சியொன்றை செய்வார் என்று எமக்கு உறுதியாக நம்பலாம்.... இன்ஷh அல்லாஹ்.


யா அல்லாஹ் இவரின் செயல்களை நீ அங்கீகரித்து இவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்றும் சுவர்க்த்தை வழங்குவாயாக.
ஏன் யோசிக்கிறீங்க இ;ப்போதே இவரின் பாடல்களை எடுத்து உங்கள் குழந்தைகளின் காதில் விழும் வண்ணம் ஒலிக்கவிட்டு பாருங்க இனிமேல் அவர்கள் சினிமா பாடல் பாடவே மாட்டாங்க.....



இவரின் இந்த இசைத்தொகுப்பு வேண்டுமானவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.......





                              A.R.M. I N A S


submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/maher-zain.html"

Wednesday, November 24, 2010

Parents desotroying world (பெற்றோரே சிந்தியுங்கள்)


என் பிள்ளை அடம் பிடிக்கிறான்
என் பிள்ளை படிப்பதேயில்லை டீவியில் மூழ்கியிருக்கிறான்
என் பிள்ளையை எப்படி திருத்துவதென்று எனக்கே புரியவில்லை
என்றெல்லாம் உலரும் பெற்றோர்களே இதை கொஞ்சம் பாருங்கள்.
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/parents-desotroying-world.html"

டயரா ? பெற்றோலா? tyre or petrol?


நம் சமூகத்தில் அதிகமாகவர்களுக்கு தெரிவதில்லை பிரச்சினைகளின் போது எப்படி அதை தீர்ப்பதில்லை.
உதாரணமாக ஒருவருக் அணிவதற்கு காற்சட்டை இல்லை அவருக்கு போய் நாம் டை கொடுத்தால் பொருத்தமாகுமாக இந்த முழுக் கதையையும் பாருங்கள் நான் என்ன சொல்வதென்று புரியும். submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/tyre-or-petrol.html"

Tuesday, November 23, 2010

True Life (உண்மையான வாழ்க்கை)


இவ்வளவு கூத்தும் கும்மாளமும் போட்டியும் பொறாமையும் விவாதமும் சண்டை எல்லாம் நம் மூச்சு நிற்கும் வரை தான் அதற்கு பிறது எங்கள் பெயரும் பிணம் என்று மாறிவிடும். வாழ்க்கையை நல்லதாக நிம்மதியாக வாழுங்கள். பாருங்கள் இந்த வீடியோவை. submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/true-life.html"

Monday, November 22, 2010

Salahudeen aiyoobi ஸலாஹூதீன் ஐயூபி


அநியாயக்கார சிலுவை வீரர்களை ஓட ஓட துரத்திய மாபெரும் வீரன். எதிரிகள் இவரை கண்டாலே நடுங்குவர். பலஸ்தீனை மஸ்ஜதிதுல் அக்ஸாவை மீட்ட மாபெரும் வீரன்.இணையத்தில் இவரை பிழையாக விமர்சிக்கும் நிரைய கார்டுன்கள் உள்ளன.
salahudeen aiyoobi legend. submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/salahudeen-aiyoobi.html"

Indian Hell (இந்திய நரகம்) Kashmeer

 
காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரச இராணுவம் செய்யும் கொடுமைகள் எண்ணிலடங்காதவை அவர்கள் இழைத்த கொடுமையில் ஒரு கொடுமைமட்டுமே இது. இந்தியாவின் ஒரு பக்கத்தில் இப்படி அநியாயம் நடந்து கொண்டிருக்ககும் போது நம் முஸ்லிம் சமூகம் வீண் விவாதங்களில் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் சிந்தனை திட்டமிட்டு சில்லைற பிரச்சினைகளின் பக்கம் திருப்பப்பட்டு அவர்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். செயல் வீரர்களாகள இந்திய முஸ்லிம் இளைஞர்கள் கோமாளிகளுடன் சொல் யுத்தத்தில் ஈடுபடுவதில் காலத்தை கழிக்கின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/indian-hell-kashmeer.html"

Friday, November 19, 2010

முஹம்மத் நபி பற்றி non muslims Prophet mohamed

உலகமே நீ நம் நபி பற்றி என்ன தான் வசை பாடினாலும் அது நம் நபியின் கண்ணியத்தை கூட்டுமே தவிர குறைக்காது. பௌர்ணமியை பார்த்து நாய்கள் குறைத்தாலும் அது ஒரு காலமும் அமாவாசையாக மாறாது பௌர்ணமி பௌர்ணமி தான். நம் நபியின் புகழை பாரெங்கும் பரப்புவோம். அவரின் அன்பு அவரின் தியாகம் அவரின் வீரம் அவரின் விவேகம் இந்த உலகத்தில் யாருக்குத்தான் வரும். நம் நபி நபித்துவம் உண்மையென உன்னவர்களே சான்று பகர்கிறார்கள். non muslim about prophet mohamed. submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/non-muslims-prophet-mohamed.html"

Tamil tharjuma..... Mana amaizi pera

submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/tamil-tharjuma-mana-amaizi-pera.html"

மனதை உலுக்கும் குரலுடன்

submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/tamil-tharjuma.html"

World END no One can Stop..........

submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/world-end-no-one-can-stop.html"

சில்லரை பிரச்சினை short film

submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/short-film.html"

Thursday, November 18, 2010

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்...


Posted by روضة الجنة
 மூலம் - இஸ்லாம்வெப்.காம் - ஷேக் அயாத் அல் கர்னி
--------------------------------------------------------------------------------
 
ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக "விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு" என்றான்.
"
தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே" என்றேன். அதற்கு ஷைத்தான் "நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்;க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!" என்றான். அவன் பேச்சில் மயங்கி உறங்கி விட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து "வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது" என்றான்.
நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் "உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை முழுமையாக அனுபவி" என்றான். நான் "மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்", என்றேன். அதற்கவன் "பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது" என்றான்.
நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான். நான் "அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்" என்றேன். "இல்லை, இல்லை. நீ இரவு படுக்குமுன் துஆ செய்யலாமே" என்றான்.
நான் "உம்ரா செல்ல நாடியுள்ளேன்" என்றேன்."நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளு தானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்" என்றான்.
நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் " நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?" என்றான். நான் "பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்" என்றேன். உடனே அவன் "மார்க்க மேதைகளிடையே இசை, பாடல் குறித்து கருத்து வேற்றுமை உள்ளது" என்றான். "இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான் படித்துள்ளேன்" என்றேன். உடனே அவன் " அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது" என்றான்.
அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் "என்ன வெட்கப்படுகிறாய்? முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!" என்றான். "அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்" என்றேன். அவன் சிரித்து விட்டு "இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான் " என்றான்.
நான் "தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்" என்றேன். உடனே அவன், "ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?" என்றான். "என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது" என்றேன். உடனே அவன் "இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன் அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்" என்றான்.

நான் "இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார் " என்றான்.

நான் "இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்?" என்றேன்.அதற்கு அவன் "அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன." என்றான்.

நான் "இமாம் புகாரி எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என் வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன்" என்று கோபமாகக் கூறினான்.

நான் "ஸலாவுதீன் அய்யூபி எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அவரைப் பற்றி பேசாதே. என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார்" என வெறுப்போடு கூறினான்.

நான் "அல் ஹஜ்ஜாஜ் பற்றி?" என இழுத்தேன். அதற்கு அவன் "அவர் போன்று இன்னும் 1000 மனிதர்கள் வரவேண்டும். அவர் தன் நடவடிக்கைகள் மூலம் என்னையும், என் தோழர்களையும் சந்தோஷப்படுத்தியது போன்று யாரும் செய்யவில்லை" என்று உற்சாகமாகக் கூறினான்.

நான் "பிர்அவ்ன் எப்படி? " என்றேன். அதற்கு அவன் "அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன் வெற்றி பெற விரும்பினேன்" என்றான்.

நான் "அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன், "அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள்" என்று உற்சாகமாகக் கூறினான்.

நான் "அபூ லஹப் எப்படி?" என்றேன். அதற்கு அவன் "நாங்கள் என்றென்றும் இணைபிரியாத தோழர்கள்" என்றான்.

நான் "லெனின் எப்படி?" என்றேன். அதற்கு அவன். "என் சிறந்த சீடர்;, ஸ்டாலின் என்ற என் சிறந்த தளபதியை உருவாக்கினார்," என்றான்.

நான் "மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி?" என இழுத்தேன். உடனே அவன் "அவை தான் என் வேத புத்தகங்கள்" என்றான்.

நான் "மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றை நான் படிப்பது வீண் விரயம்" என்றான் கேலியாக.

நான் "டி.வி., சாடிலைட் சேனல் பற்றி" என்றேன். அதற்கு அவன் "அவை தான் மக்களை என்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை" என்றான்.

நான் "பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு" என்றேன்.
அதற்கு அவன் "அவை மட்டுமல்ல சன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ் இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள் பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவை மூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்" என்று பெருமையாகக் கூறினான்.

நான் "காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான் வரவேற்கிறேன்" என்றான்.
நான் "சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்", என்றான்.
நான் "கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன்.

அதற்கு அவன் "என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்" என்று பெருமையோடு கூறினான்.

நான் "இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே" என்றான்.

நான் "வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே," என்று பெருமையாகக் கூறினான்.

நான் "மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்". ஆமாம், என்ன

நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.
"
சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?" என்று நான் வினவினேன். அதற்கு அவன் "அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்" என்றான்.
"
சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?" என்று நான் வினவினேன்.அதற்கு அவன் "அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்" என்றான்.

"
நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் "சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம்.
1.
தந்தை,
2.
சகோதரன்,
3.
கணவன்,
4.
மகன்.
சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்" என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.

நான் "இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்" என்றான்.
நான் "சரி நவீன, புதிய கலாச்சாரம் (Modern Culture-Society) பற்றி கூறேன்" என்றேன்.
அதற்கு அவன் "என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?" என்றான்.

நான் "மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்" என்றான்.

நான் "ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்" என்றேன்.
அதற்கு அவன் கோபமாக "அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்" என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.
நான் "காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன் உற்சாகமாக, "நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்" என்று கூறினேன்.

நான் "பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்" என்று கேட்டேன்.
அதற்கு அவன், "நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்" என்று கூறினான்.
நான் "ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்" எனக் கூறினான்.

நான் "உன் துஆ எது?" என்றேன். அவன் "சினிமா பாடல்கள்" என்றான்.

நான் "உன் குறிக்கோள் என்ன?" என்றேன். அதற்கு அவன் "மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது" என்றான்.
நான் "சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்", என்றான்.
நான் "கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன்.

அதற்கு அவன் "என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்" என்று பெருமையோடு கூறினான்.

நான் "இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே" என்றான்.

நான் "வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே," என்று பெருமையாகக் கூறினான்.

நான் "மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்". ஆமாம், என்ன

நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.
"
சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?" என்று நான் வினவினேன். அதற்கு அவன் "அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்" என்றான்.
"
சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?" என்று நான் வினவினேன்.அதற்கு அவன் "அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்" என்றான்.

"
நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் "சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம்.
1.
தந்தை,
2.
சகோதரன்,
3.
கணவன்,
4.
மகன்.
சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்" என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.

நான் "இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்" என்றான்.
நான் "சரி நவீன, புதிய கலாச்சாரம் (Modern Culture-Society) பற்றி கூறேன்" என்றேன்.
அதற்கு அவன் "என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?" என்றான்.

நான் "மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்" என்றான்.

நான் "ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்" என்றேன்.
அதற்கு அவன் கோபமாக "அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்" என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.
நான் "காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன் உற்சாகமாக, "நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்" என்று கூறினேன்.

நான் "பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்" என்று கேட்டேன்.
அதற்கு அவன், "நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்" என்று கூறினான்.
நான் "ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்" எனக் கூறினான்.

நான் "உன் துஆ எது?" என்றேன். அவன் "சினிமா பாடல்கள்" என்றான்.

நான் "உன் குறிக்கோள் என்ன?" என்றேன். அதற்கு அவன் "மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது" என்றான்





A.R.M. INAS


inasinas@live.com


submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_18.html"