Total Pageviews

Thursday, November 18, 2010

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்...


Posted by روضة الجنة
 மூலம் - இஸ்லாம்வெப்.காம் - ஷேக் அயாத் அல் கர்னி
--------------------------------------------------------------------------------
 
ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக "விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு" என்றான்.
"
தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே" என்றேன். அதற்கு ஷைத்தான் "நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்;க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!" என்றான். அவன் பேச்சில் மயங்கி உறங்கி விட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து "வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது" என்றான்.
நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் "உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை முழுமையாக அனுபவி" என்றான். நான் "மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்", என்றேன். அதற்கவன் "பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது" என்றான்.
நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான். நான் "அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்" என்றேன். "இல்லை, இல்லை. நீ இரவு படுக்குமுன் துஆ செய்யலாமே" என்றான்.
நான் "உம்ரா செல்ல நாடியுள்ளேன்" என்றேன்."நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளு தானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்" என்றான்.
நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் " நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?" என்றான். நான் "பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்" என்றேன். உடனே அவன் "மார்க்க மேதைகளிடையே இசை, பாடல் குறித்து கருத்து வேற்றுமை உள்ளது" என்றான். "இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான் படித்துள்ளேன்" என்றேன். உடனே அவன் " அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது" என்றான்.
அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் "என்ன வெட்கப்படுகிறாய்? முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!" என்றான். "அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்" என்றேன். அவன் சிரித்து விட்டு "இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான் " என்றான்.
நான் "தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்" என்றேன். உடனே அவன், "ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?" என்றான். "என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது" என்றேன். உடனே அவன் "இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன் அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்" என்றான்.

நான் "இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார் " என்றான்.

நான் "இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்?" என்றேன்.அதற்கு அவன் "அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன." என்றான்.

நான் "இமாம் புகாரி எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என் வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன்" என்று கோபமாகக் கூறினான்.

நான் "ஸலாவுதீன் அய்யூபி எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அவரைப் பற்றி பேசாதே. என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார்" என வெறுப்போடு கூறினான்.

நான் "அல் ஹஜ்ஜாஜ் பற்றி?" என இழுத்தேன். அதற்கு அவன் "அவர் போன்று இன்னும் 1000 மனிதர்கள் வரவேண்டும். அவர் தன் நடவடிக்கைகள் மூலம் என்னையும், என் தோழர்களையும் சந்தோஷப்படுத்தியது போன்று யாரும் செய்யவில்லை" என்று உற்சாகமாகக் கூறினான்.

நான் "பிர்அவ்ன் எப்படி? " என்றேன். அதற்கு அவன் "அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன் வெற்றி பெற விரும்பினேன்" என்றான்.

நான் "அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன், "அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள்" என்று உற்சாகமாகக் கூறினான்.

நான் "அபூ லஹப் எப்படி?" என்றேன். அதற்கு அவன் "நாங்கள் என்றென்றும் இணைபிரியாத தோழர்கள்" என்றான்.

நான் "லெனின் எப்படி?" என்றேன். அதற்கு அவன். "என் சிறந்த சீடர்;, ஸ்டாலின் என்ற என் சிறந்த தளபதியை உருவாக்கினார்," என்றான்.

நான் "மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி?" என இழுத்தேன். உடனே அவன் "அவை தான் என் வேத புத்தகங்கள்" என்றான்.

நான் "மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றை நான் படிப்பது வீண் விரயம்" என்றான் கேலியாக.

நான் "டி.வி., சாடிலைட் சேனல் பற்றி" என்றேன். அதற்கு அவன் "அவை தான் மக்களை என்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை" என்றான்.

நான் "பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு" என்றேன்.
அதற்கு அவன் "அவை மட்டுமல்ல சன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ் இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள் பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவை மூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்" என்று பெருமையாகக் கூறினான்.

நான் "காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி?" என்றேன். அதற்கு அவன் "அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான் வரவேற்கிறேன்" என்றான்.
நான் "சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்", என்றான்.
நான் "கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன்.

அதற்கு அவன் "என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்" என்று பெருமையோடு கூறினான்.

நான் "இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே" என்றான்.

நான் "வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே," என்று பெருமையாகக் கூறினான்.

நான் "மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்". ஆமாம், என்ன

நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.
"
சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?" என்று நான் வினவினேன். அதற்கு அவன் "அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்" என்றான்.
"
சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?" என்று நான் வினவினேன்.அதற்கு அவன் "அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்" என்றான்.

"
நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் "சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம்.
1.
தந்தை,
2.
சகோதரன்,
3.
கணவன்,
4.
மகன்.
சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்" என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.

நான் "இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்" என்றான்.
நான் "சரி நவீன, புதிய கலாச்சாரம் (Modern Culture-Society) பற்றி கூறேன்" என்றேன்.
அதற்கு அவன் "என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?" என்றான்.

நான் "மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்" என்றான்.

நான் "ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்" என்றேன்.
அதற்கு அவன் கோபமாக "அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்" என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.
நான் "காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன் உற்சாகமாக, "நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்" என்று கூறினேன்.

நான் "பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்" என்று கேட்டேன்.
அதற்கு அவன், "நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்" என்று கூறினான்.
நான் "ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்" எனக் கூறினான்.

நான் "உன் துஆ எது?" என்றேன். அவன் "சினிமா பாடல்கள்" என்றான்.

நான் "உன் குறிக்கோள் என்ன?" என்றேன். அதற்கு அவன் "மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது" என்றான்.
நான் "சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்", என்றான்.
நான் "கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன்.

அதற்கு அவன் "என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்" என்று பெருமையோடு கூறினான்.

நான் "இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே" என்றான்.

நான் "வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே," என்று பெருமையாகக் கூறினான்.

நான் "மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்". ஆமாம், என்ன

நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.
"
சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?" என்று நான் வினவினேன். அதற்கு அவன் "அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்" என்றான்.
"
சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?" என்று நான் வினவினேன்.அதற்கு அவன் "அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்" என்றான்.

"
நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?" எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் "சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம்.
1.
தந்தை,
2.
சகோதரன்,
3.
கணவன்,
4.
மகன்.
சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்" என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.

நான் "இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?" என்றேன்.
அதற்கு அவன் "சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்" என்றான்.
நான் "சரி நவீன, புதிய கலாச்சாரம் (Modern Culture-Society) பற்றி கூறேன்" என்றேன்.
அதற்கு அவன் "என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?" என்றான்.

நான் "மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?" என்றேன். அதற்கு அவன் "அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வௌ;வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்" என்றான்.

நான் "ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்" என்றேன்.
அதற்கு அவன் கோபமாக "அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்" என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.
நான் "காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன் உற்சாகமாக, "நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்" என்று கூறினேன்.

நான் "பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்" என்று கேட்டேன்.
அதற்கு அவன், "நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்" என்று கூறினான்.
நான் "ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்" எனக் கூறினான்.

நான் "உன் துஆ எது?" என்றேன். அவன் "சினிமா பாடல்கள்" என்றான்.

நான் "உன் குறிக்கோள் என்ன?" என்றேன். அதற்கு அவன் "மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது" என்றான்





A.R.M. INAS


inasinas@live.com


submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_18.html"

Thursday, November 11, 2010

உலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே (குர்ஆன்)

உலகவாழ்க்கை 3 மணித்தியாலம் மாத்திரமே 

                                       (குர்ஆன்)


by Abdul Raheem Mohamed Inas on Thursday, November 11, 2010 at 8:19am

நிச்சயமாக அவர்கள் அதனை (கண்ணால்) காணும் நாளில் மாலையிலோ அல்லது முற்பகலிலோ(சிறிது நேரமே) (உலகில்) அவர்கள் தங்கியிருந்தது போன்று (அவர்களுக்குத் தோன்றும்).(79:46)

இந்த குர்ஆன் வசனத்தை கவனமாக நாம் பார்போமானால் இந்த உலகம் மிகவும் அற்பமானது என்று நமக்கு தோன்றும்.அதாவது இந்த உலக வாழ்க்கை ஒரு மாலைப்பொழுது அல்லது முற்பகல் பொழுது  போன்று மிகவும் ஒரு குறுகிய நேரம்.


ஒருவன் மறுமைநாளில் தன் உலக  வாழ்வை மீட்டிப்பார்த்தால் அவர்கள் இப்படித்தான் உணர்வார்கள்.உதாரணமாக மாலை நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அது எவ்வளவு நேரம் இருக்கும் கூடினால் ஒரு 3 மணித்தியாலங்கள் இருக்கும். முற்பகல் பொழுதும் பெரும்பாலும் ஒரு சிரிய நேரமே இருக்கும்.அதாவது ஒரு சிரிய பயணம் போகும் நேரம். உதாரணமாக கொழும்பிலிருந்து கண்டிக்கு பயணம் செல்லும் நேரம்.  நாங்கள் உலகில் வாழ்நாள் முழுதும் இன்பம் அனுபவித்தோம் என்று வைத்துக்கொள்வோம் அதனை மறுமையோடு ஒப்பிடும் போது அது வெறுமனே 3 மணித்தியால இன்பம் மட்டும் தான். உண்மையில் எம்மால் நிச்சயம் வாழ்நாள் பூராவும் இன்பம் அனுபவிக்க முடியாது ஏனெனில் இன்பம் என்பதை புரிந்துகொள்ளும் போதே எமது வாழ்க்கையில் அரைவாசி முடிந்துவிடும். அந்த இன்பத்தை விளங்கி அனுபவிக்ககும் போது எமக்கு நோய் வயோதிபம் (சீனிவியாதி கொலஸ்ட்ரோல்) அப்படியெல்லாம் வந்து அதில் காலம் கழிந்துவிடும். அப்படிப் பார்த்தால் நாம் உலக இன்பத்தை வாழ்நாள் பூராக அனுபவித்தாலும் அந்த இன்பத்தை மறுமையோடு ஒப்பிட்டால் உலக இன்பம் ஒரு சில மணித்தியாலங்கள் போல் தான் இருக்கும்.

இதை நீங்கள் இன்னும் சற்று ஆழமாக புரியவேண்டுமானால் நீங்கள் உங்கள் கடந்த காலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் உணர்வு எப்படியிருக்கும் நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள் நாம் இவ்வுலகில் நேற்று தான் பிறந்து வளர்ந்து எல்லாம் நடந்தது போல் இருக்கும். அதாவது கொஞ்சம் காலம் தான் நாம் வாழ்ந்தது போல் நாம் உணர்வோம். அப்படி நாம் கற்பனை செய்யும் போது நாம் சில இடங்களில் யோசிப்போம் நான் இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே நான் அப்படி செய்திருந்தால் நான் முன்னேறியிருப்போமே என்று கைசேதமும் படுவோம்.

அவ்வாறு தான் மறுமை மஹ்ஷரில் நீங்கள் இந்த உலக வாழ்க்கையை கற்பனை செய்து பார்த்தால் இந்த உலக வாழ்க்கை ஒரு சில மணித்தியாலங்கள் போல் தான் இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள் அந்த ஒரு சில மணித்தியால இன்பங்களுக்காக வேண்டி தான் நாம்அடுத்தவனுக்கு குழிபறிக்கிறோம் அடுத்தவனுக்கு காபிர் முனாபிக் என்று பத்வா கொடுக்கிறோம். உலகமே அது தான் என்று கூறிக் கொண்டு இளைஞர்கள் பெண்களின் பின்னால் அழைகிறோம். ஒரு கூட்டம் சினிமாவின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம் பணத்தின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம் அரசியல்வாதிகளின் பின்னால் அழைகிறது இன்னொரு கூட்டம் புகழ் பதவியின் பின்னால் அழைகிறது.

சற்று சிந்தித்து பாருங்கள் இது எல்லாவற்றின் பின்னால் அழைந்து நாம் அதை பெற்றுக்கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம்  அதை மறுமை வாழ்வோடு ஒப்பிடும் போது அது ஒரு சில மணித்தியால இன்பம் மாத்திரமே.

மஹ்ஷரில் நடக்;கும் ஒரு விடயத்தை சற்று உணர்ந்து பாருங்கள் நாம் இந்த உலகில் ஒரு நாள் தூங்காமல் இருந்தால் நம் நிலை எப்படியிருக்கும் நாம் இங்கு எவ்வளவுதான் பசி தாகம் துன்பம் என்ன வந்தாலும் ஒரு தூக்கம் தூங்கினால் நமக்கு அந்த கஷ்டம் கொஞ்சம் விளங்காமல் போகும். ஆனால் மஹ்ஷரில் தூக்கமும் இருக்காது. தூக்கமில்லாமல் குடிக்க தண்ணீர் இல்லாமல் உண்ண உணவில்லாமல் நாம் அங்கு அழையப் போகிறோம். அது மட்டுமல்ல சூரியன் பணிக்கப்படும் வெயில் கூட கடுமையாக இருக்கும். உண்மையில் அந்த காட்சியை கொஞ்சம் சற்று சிந்தித்து பாருங்கள். இந்த உலகில் நாம் ஒரு நாள் தூங்காமல் இருந்தாலே நமது நிலை மோசமாகிவிடும் ஆனால் மஹ்ஷரில் தூக்கம் இல்லை தண்ணீர் இ;ல்லை உணவும் இல்லை ஆயிரக்கணக்கான வருடம் நாம் மஹ்ஷரில் அலைந்து திரிய வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள் நிலைமையை. மஹ்ஷரின் வேதனை தாங்க முடியாமல் மக்கள் சொல்வார்கள் இந்த மஹ்ஷர் வேதனையை நிறுத்திவிட்டு விசாரணையை ஆரம்பித்து எங்களை நரகில் அல்லது சுவர்க்கத்தில் போடுங்கள் என்பார்கள் (விசாரணை நாளினது பயங்கரம் தெரியாமல்).

உண்மையில் மறுமையென்பது நாங்கள் நினைப்பது போல் ஒரு சிரிய விடயம் அல்ல. அது மிகவும் பயங்கரமானது.

பாருங்கள் மனிதர்களில் மடையர்கள் 2 வகை

1.    தனது உலகத்திற்காக தனது ஆகிரத்தை(மறுமையை) இழப்பவன்அதாவது இந்த உலக அற்ப 3 மணித்தியால உலகத்தை அனுபவிப்பதற்காக உலகில் உள்ள அத்தனை பாவங்களையும் செய்பவன். வட்டி ஏமாற்றுதல் மோசடி செய்தல் அடுத்தவனின் சொத்தை திருடுதல் விபச்சாரம் பொய் களவு காதலிக்காக பெற்றோரை புறக்கணித்தல் காபிரான சினிமா கூத்தாடிகளின் பின்னால் அழைதல் இப்படி உலகில் இருக்கும் அத்தனை பாவங்களையும் செய்து தனது மறுமையை தனது உலக இன்பங்களுக்காக பாழாக்கிக் கொள்பவன்.

2.    பிறரின் உலகத்திற்காக தனது ஆகிரத்தை (மறுமையை) நாசமாக்கி கொள்பவன்.அதாவது தனது மனைவி தனது பிள்ளை தனது உறவினர்களை வாழவைக்க தொழுகை இபாதத் எல்லாவற்றையும் மறந்து உழைத்தல் இவர்கள் எந்நேரம் பார்த்தாலும் பிஸ்னஸ் தன் மகளுக்கு பெரிய இடத்துல் திருமணம் செய்து வைக்க வேண்டும் எமது பிள்ளைகள் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் ரஸூல் மார்க்கம் எல்லாவற்றையும் மறந்து உழைத்தல் பணம் சேமிப்பதிலேயே அவனது காலம் முடிந்துவிடும் வீடுகட்டுவதிலேயே அவனது ஆயுள் முடிந்துவிடும். பெருநாளைகளுக்கு கூட அவன் வீட்டில் இருக்கமாட்டான் பணம் பணம் பணம்தான் உலகம் என்று அலைந்து திரிவான். கடைசியில் அவன் உலக இன்பத்தையும் இழக்கிறான் மறுமை இன்பத்தையும் இழக்கிறான். அங்கும் நஷ்டம் இங்கும் நஷ்டம். மறுமையில் அவன் யாருக்காக உழைத்தானோ அவர்களே அவனை விட்டு விரண்டோடுவார்கள் அந்த நேரம் கைசேதப்பட்டு  எந்த பயனும் இல்லை.

பாருங்கள் எவ்வளவு பெரிய மடத்தனம் ஒரு சில மணித்தியால இன்பங்களுக்காக அவன் இழப்பது எந்த கண்ணும் பார்திடாத எந்த காதும் கேட்டிடாத நம்மால் கற்பனையும் செய்து பார்க்க முடியாத இன்பத்தை இழக்கிறான். அது மட்டுமா அவனுக்கு அதற்கு பதிலாக கிடைக்கப் போவது பயங்கரமான வேதனை அவன் கற்பனையும் செய்து பார்த்திடாத வேதனை.

இந்த உலகத்தில் அடிக்கும் கூத்தையெல்லாம் அடித்துவிட்டு அங்கு மறுமை வேதனையின் கடுமையை கண்டவுடன் பாவத்தில் மூழ்கிய மனிதர்கள் கூறும் வார்த்தை நான் மனிதனாக இல்லாமல் மண்ணோடு மண்ணாகியிருந்திருக்க கூடாதா என்பார்கள்.உண்மையில் அது காலம் தாழ்த்திய ஞானம்.

சிந்தித்து பாருங்கள் சகோதரர்களேகுர்ஆனின் பார்வையில் உலக வாழ்ககை ஒரு சில மணித்தியாலங்களே அந்த ஒரு சில மணித்தியால இன்பத்துக்காக வேண்டி நாம் இழக்கப் போவது நிலையான எந்த கண்ணும் கண்டிராத எந்த காதுகளும் கேட்டிராத யாராலும் கற்பனையும் செய்து பார்க்க முடியாத இன்பத்தை.எமக்கு கிடைக்கும் தண்டனையை பொருத்தவரையில் உதாரணமாக நாம் ஒருவரை லேசாக நோண்டுவதாக எடுத்துக் கொள்வோம் லேசாக வழிக்கும் அதே செயலை நாம் பல ஆயிரம் வருடங்கள் தொடர்ந்து செய்தால் வேதனை எப்படியிருக்கும் (நிச்சயம் அது கடும் வேதனையாகத்தானிருக்கும்) ஆனால் நரகம் சிரிய வேதனையல்ல மிகவும் கடுமையானது. நரகத்தை கண்டதிலிருந்து அதற்கு பொறுப்பான மலக்கு சிரிக்கவே இல்லை அந்த வேதனை வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை.

உலகில் நாம் அனுபவிக்கும் துன்பம் கஷ்டங்கள் அது நரக வேதனையில் துளி கூட இல்லை.

நாங்க்ள கொஞ்சம் காலம் அதாவது 3 மணித்தியாலம் பொறுமையாக இஸ்லாத்தை பின்பற்றினால் அப்படி நாம் இஸ்லாத்தை பின்பற்றுவதால் நமக்கு வரும் கஷ்டம் துன்பம் சோதனை எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து வாழ்ந்தால் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.அல்லாஹ் நாம் மண்ணோடு மண்ணாகியிருக்கக் கூடாதா என்று கைசேதப்படவும் தேவையில்லை.

A.R.M. INAS
inasinas@live.com
inaasinaas.blogspot.com
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/3.html"

Monday, November 8, 2010

உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.

உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.

ஹஜ்ஜூப் பெருநாள் வருகிறது எல்லோரும் அதைப்பற்றியே பேசுகிறார்கள் அந்த நாட்களின் சிறப்புகளை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் நான் இங்கே குறிப்பிட வருவது ஹஜ்ஜூப் பெருநாள் என்பதன் மூலம் நாம் உணர்வது என்ன? அதன் நோக்கம் என்ன.


ஹஜ்ஜூப் பெருநாளுக்கு இன்னுமொரு பெயர் தான் தியாகத்திருநாள். அதாவது இப்றாஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவுகூர்வது என்றும் கூறலாம்.நாம் எல்லோரும் அவரின் தியாகத்தை நினைவுகூர்வதுடன் விட்டுவிடுகிறோம். உண்மையில் அதை நினைவுகூர்வது மட்டும் போதாது அவரின் தியாகத்தை நாம் உணர முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் அது எம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

என்ன இவர் சொல்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அந்த நபியின் தியாகத்தை உணர ஒரு வழி முடியுமானால் முயற்சி செய்யுங்கள்.

ஹஜ் பெருநாளின் ஒரு முக்கிய நிகழ்வு தான் உழ்ஹிய்யா கொடுப்பது. அதாவது இப்றாஹீம் அலை தனது நீண்ட காலம் காத்திருந்து பெற்றெடுத்த மகனை அல்லாஹ்வுக்காக அருக்க முற்பட்டது.இந்த சம்பவத்தை நாம் ஓரிரண்டு வரிகளில் சொல்லி முடித்தாலும் உண்மையில் அது ஒரு உணர்வுபூர்வமாக அணுக வேண்டிய சம்பவம்.

அதை நாம் practical aha உணர்ந்து பார்க்கலாம்.அதாவது உழ்ஹிய்யாவுக்காக நாம் மாட்டை அருக்கும் போது நாம் முடியுமானால் எம் மனதில் ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அங்கு அருப்பதற்காக தயார் நிலையில் இருப்பது எனது சொந்த மகன் நான் நீண்ட காலம் பெற்று வளர்த்த மகன். அல்லது  உலகில் எனக்கு மிகவும் அன்புக்குரிய நபர். என்று சற்று கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் அப்படியான ஒரு செயலுக்கு முற்படுவீரா. சொந்த மகன நீங்கள் அருப்பீர்களா அல்லாஹ்வுக்காக.
நிச்சயம் அது எங்களால் முடியாத காரியம் ஆனால் நம் இப்றாஹீம் அலை அவர்கள் தன் மகனை அருத்தார்கள் ஆனால் அருபடவில்லை. முடியுமானால் அந்த சூழ்நிலையை உங்கள் மனதில் கற்பனை செய்து பாருங்கள்.
ஒரே ஒரு மகன்
அதுவும் நீண்டகாலத்தின் பின் கிடைத்த மகன்.
அல்லாஹ்விடமிருந்து கட்டளை வருகிறது அவரை அருத்து பழியிடுங்கள்.
நபி திருப்பி அல்லாஹ்விடம் ஒரு கேள்விகூட கேட்கவில்லை.
மகன் தந்தையிடம் கேட்டது ஒரே ஒரு கேள்வி தான் இது அல்லாஹ்வின் கட்டளையா?
உண்மையில் நீங்கள் அந்த சம்பவத்தை மணக்கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அந்த  தியாகம் யாரால் செய்ய முடியும்.

உண்மையில் நீங்கள் தியாகத் திருநாளை இப்படி உணர்வுபூர்மாக பார்;த்தால்.நிச்சயம் அது எமது மனமாற்றத்துக்கு வழிவகுக்கும்.உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.


இப்படி இப்றாஹீம் அலை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் இவ்வாறான கடும் சோதனைகளை சந்தித்தவர் அவரின் வாழ்க்கை சம்பவங்களை உணர்வுபூர்வமாக அனுக ஒரு சிறந்த சந்தர்ப்பம் தான் இந்த தியாகத் திருநாள்.
முடியுமானால் உணர்ந்து பாருங்கள்.

A.R.M. INAS
inasinas@live.com

submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_08.html"

Sunday, November 7, 2010

காட்டுமிராண்டிகளின் மதம் இஸ்லாம்

காட்டுமிராண்டிகளின் மதம் இஸ்லாம்



ISLAM VIOLENT
WANMURAI MAZAM.....
KAATUMIRANDI MAZAM....
PARUNGAL INDA VIDEO submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_07.html"

Tuesday, November 2, 2010

எனது இந்த சிரிய படைப்பை உங்கள் இணையத்தில் பதிந்ததற்கு மிக்க நன்றிகள்

Malcom X short film published in oruummah.org

One World One Ummah

Malcolm X என்ற அமெரிக்க விடுதலைப் போராளி

குறும் படத்தை பார்க்க  click the link

வீடியோ ஆக்கம்: அப்துல் ரஹீம் முஹமட் இனாஸ்
இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன்வைத்து அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க  இஸ்லாமிய  போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X .
Malcolm X- கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக 1965 ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் X ஒருவனால் சுட்டு கொல்லபட்டார் சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன் இவன் அண்மையில் சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால் யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை விரிவாக பார்க்க
அமெரிக்காவில் மோசமான குடும்பத்தில் பிறந்தார் மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர் FBI குறிவைத்து கொலை செய்யதுவிட துடித்து இறுதியில் .. கொலை செய்யப்பட்டார் அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் அத்திவாரம் தகர்க்கப்பட்டதாக கருதியது
மால்கம் X அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் என்ற தீபத்தை அணைத்திட அமெரிக்க மேலாதிக்கம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனால் அமெரிக்க மேலாதிக்கதினால் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியை தடுக்க முடியவில்லை – மால்கம் X அவர் கொல்லப்படவில்லை இன்னும் சுத்தமான விடுதலையையும் சுதந்திரத்தையும்  சுவாசிக்க துடிக்கும் உள்ளங்களில் வாழ்கின்றார்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_02.html"

கருப்பு இனத்தின் அழிவு

கருப்பர்கள் மனிதர்களா?
இல்லை மிருகங்களா?
இல்லை அதைவிட கேவலமானவர்களா? submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post.html"