Total Pageviews

Monday, November 8, 2010

உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.

உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.

ஹஜ்ஜூப் பெருநாள் வருகிறது எல்லோரும் அதைப்பற்றியே பேசுகிறார்கள் அந்த நாட்களின் சிறப்புகளை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் நான் இங்கே குறிப்பிட வருவது ஹஜ்ஜூப் பெருநாள் என்பதன் மூலம் நாம் உணர்வது என்ன? அதன் நோக்கம் என்ன.


ஹஜ்ஜூப் பெருநாளுக்கு இன்னுமொரு பெயர் தான் தியாகத்திருநாள். அதாவது இப்றாஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவுகூர்வது என்றும் கூறலாம்.நாம் எல்லோரும் அவரின் தியாகத்தை நினைவுகூர்வதுடன் விட்டுவிடுகிறோம். உண்மையில் அதை நினைவுகூர்வது மட்டும் போதாது அவரின் தியாகத்தை நாம் உணர முயற்சிக்க வேண்டும். அப்பொழுது தான் அது எம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

என்ன இவர் சொல்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அந்த நபியின் தியாகத்தை உணர ஒரு வழி முடியுமானால் முயற்சி செய்யுங்கள்.

ஹஜ் பெருநாளின் ஒரு முக்கிய நிகழ்வு தான் உழ்ஹிய்யா கொடுப்பது. அதாவது இப்றாஹீம் அலை தனது நீண்ட காலம் காத்திருந்து பெற்றெடுத்த மகனை அல்லாஹ்வுக்காக அருக்க முற்பட்டது.இந்த சம்பவத்தை நாம் ஓரிரண்டு வரிகளில் சொல்லி முடித்தாலும் உண்மையில் அது ஒரு உணர்வுபூர்வமாக அணுக வேண்டிய சம்பவம்.

அதை நாம் practical aha உணர்ந்து பார்க்கலாம்.அதாவது உழ்ஹிய்யாவுக்காக நாம் மாட்டை அருக்கும் போது நாம் முடியுமானால் எம் மனதில் ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அங்கு அருப்பதற்காக தயார் நிலையில் இருப்பது எனது சொந்த மகன் நான் நீண்ட காலம் பெற்று வளர்த்த மகன். அல்லது  உலகில் எனக்கு மிகவும் அன்புக்குரிய நபர். என்று சற்று கற்பனை செய்து பாருங்கள் நீங்கள் அப்படியான ஒரு செயலுக்கு முற்படுவீரா. சொந்த மகன நீங்கள் அருப்பீர்களா அல்லாஹ்வுக்காக.
நிச்சயம் அது எங்களால் முடியாத காரியம் ஆனால் நம் இப்றாஹீம் அலை அவர்கள் தன் மகனை அருத்தார்கள் ஆனால் அருபடவில்லை. முடியுமானால் அந்த சூழ்நிலையை உங்கள் மனதில் கற்பனை செய்து பாருங்கள்.
ஒரே ஒரு மகன்
அதுவும் நீண்டகாலத்தின் பின் கிடைத்த மகன்.
அல்லாஹ்விடமிருந்து கட்டளை வருகிறது அவரை அருத்து பழியிடுங்கள்.
நபி திருப்பி அல்லாஹ்விடம் ஒரு கேள்விகூட கேட்கவில்லை.
மகன் தந்தையிடம் கேட்டது ஒரே ஒரு கேள்வி தான் இது அல்லாஹ்வின் கட்டளையா?
உண்மையில் நீங்கள் அந்த சம்பவத்தை மணக்கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அந்த  தியாகம் யாரால் செய்ய முடியும்.

உண்மையில் நீங்கள் தியாகத் திருநாளை இப்படி உணர்வுபூர்மாக பார்;த்தால்.நிச்சயம் அது எமது மனமாற்றத்துக்கு வழிவகுக்கும்.உழ்ஹிய்யா என்பது மாட்டை அருத்து பங்கிடும் ஒரு சடங்கல்ல அது ஒரு உணர்வுபூர்மான சம்பவத்தை நினைவூட்டும் இபாதத்.


இப்படி இப்றாஹீம் அலை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் இவ்வாறான கடும் சோதனைகளை சந்தித்தவர் அவரின் வாழ்க்கை சம்பவங்களை உணர்வுபூர்வமாக அனுக ஒரு சிறந்த சந்தர்ப்பம் தான் இந்த தியாகத் திருநாள்.
முடியுமானால் உணர்ந்து பாருங்கள்.

A.R.M. INAS
inasinas@live.com

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/blog-post_08.html"

2 comments:

  1. 'இப்படி இப்றாஹீம் அலை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் இவ்வாறான கடும் சோதனைகளை சந்தித்தவர் அவரின் வாழ்க்கை சம்பவங்களை உணர்வுபூர்வமாக அனுக ஒரு சிறந்த சந்தர்ப்பம் தான் இந்த தியாகத் திருநாள்.
    முடியுமானால் உணர்ந்து பாருங்கள்'

    சகோ. இனாஸ்! உங்களின் ஆக்கத்திற்கு நன்றி. மேலும் இருதியாக குறிப்பிட்ட வாசகத்தை சற்று ஆழமாக அதன் யதார்த்த விஷயங்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள். http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/perunal_uraikal/
    நன்றி
    அன்ஸார்- தோஹா

    ReplyDelete
  2. jazakalla nanbare ungal link itku

    ReplyDelete